Thursday, July 06, 2017

சாராங்கதாரா




சாராங்கதாரா என ஒரு படம். சிவாஜி, பானுமதி நடிப்பில் 1958ல் வெளியானது. நாடக்கலையின் தந்தையான சங்கரதாஸ் சாமி எழுதிய நாடகம். ஆந்திராவில் வெங்கியை ஆண்ட ராஜராஜ சோழனின் கொள்ளுபேரன் ராஜராஜ நரேந்திரனின் கதையாம்.




சாரங்கதாரா கதை துயரம் மிகுந்தது. மன்னன் ராஜராஜ நரேந்திரன் (ராஜேந்திர சோழன் மகள் குந்தவையின் மகன்) வெங்கியை ஆன்டுவருகிறான். அவனது மகன் சாரங்கதாரன்.

சாரங்கதாரனுக்கு பெண் தர விருப்பபட்டு சித்ராங்கி எனும் இளவரசியின் ஓவியத்தை அவளது பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள். ஓவியத்தை கண்ட வயதான மன்னன் நரேந்திரன் காதலில் விழுகிறான். அதன்பின் மந்திரியின் சதிதிட்டத்தின் பேரில் தன் உடைவாளை அனுப்பி அதற்கு மாலையிட சொல்கிறான். சாரங்கதாரனுக்கு கல்யானம் செய்து வைப்பதாக நினைத்து சித்ராங்கியின் பெற்றோர் அவளை அந்த உடைவாளுக்கு மாலையிட சொல்ல, அவள் அதற்கு மாலையிட்டு விடுகிறாள். அக்காலத்தில் ஒருவனுடைய உடைவாளுக்கு மாலையிடுவது அவனையே திருமணம் செய்வது போல என்பதால் சித்ராங்கி ராஜராஜ நரேந்திரனின் மனைவி ஆகிவிடுகிறாள்.

அரண்மனைக்கு வந்த சித்ராங்கியால் அழுது புலம்ப மட்டுமே முடிகிறது. அதன்பின் சாரங்கதாரனை கண்டு தான் ஏமாற்றபட்டதை சொல்லி அவன் மேல் உள்ள காதலை சொல்கிறாள். அவன் அவளை தாயாக நினைப்பதாக சொல்லி அவளை தவிர்க்கிறான்

கோபமடைந்த சித்ராங்கி சாரங்கதாரனை வழிக்கு கொண்டுவர அவன் தன்னை காதலிப்பதாக கதை கட்ட, அது மன்னன் காதுகளுக்கு போகிறது. கோபமடைந்த மன்னன் நரேந்திரன் மகனை மாறுகை, மாறுகால் வாங்க உத்தரவிடுகிறான். கொலைகளத்தில் சாரங்கதாரனுக்கு மாறுகை, மாறுகால் வாங்கப்பட, சித்ராங்கி தீப்பாய்ந்து உயிரை விடுகிறாள்

இதுதான் ஒரிஜினல் கதை

நாடகமாக பெருவெற்றி அடைந்த இக்கதையை இந்தி, தமிழ் இரண்டிலும் 1938ல் தயாரித்தார்கள். தமிழில் சாரங்கதாரனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி பாகவதர். தமிழை முந்திக்கொண்டு இந்திப்படம் வெளியாகி படுதோல்வியை தழுவியது. என்ன காரணம் என பார்த்தால் சோகமான முடிவு மக்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது. அதன்பின் எடுத்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றி  ஷூட் செய்து தமிழில் "நவீன சாரங்கதாரா" என பெயர் மாற்றம் செய்து மாறுகை, மாறுகால் வாங்கபட்ட சாரங்கதாரனை ஒரு பவுத்த துறவி மீண்டும் நலம்பெற செய்வதுபோலவும், மன்னன் மனம் திருந்தி சாரங்கதாரனுக்கும், சித்ராங்கிக்கும் கல்யானம் செய்து வைப்பது போலவும் படம் எடுக்க படம் சூப்பர் ஹிட்

இதை 1958ல் சிவாஜி, பானுமதியை வைத்து ரிமேக் செய்தார்கள். சிவாஜி தான் சாரங்கதாரன். பானுமதி சித்ராங்கி. 1958ல் கதையில் அக்கால மரபுகளுக்கு ஏற்ப ஒரு மாற்றம். சிவாஜி இறுதியில் உயிர்பிழைக்கிறார். தந்தை நரேந்திரன் (நம்பியார்) கொல்லாப்டுகிறார். பானுமதி சிவாஜி மடியில் படுத்தபடி உயிர்விடுகிறார். அவரது கடைசி ஆசை "சாரங்கதாரன் கையால் தனக்கு ஈமக்கடன் நடக்கவேண்டும்" என்பது. சளைக்காத சிவாஜியும் "தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதிகடனை நிறைவேற்றுவேன்" என சொல்ல "ச்சை," என சலித்தபடி பானுமதி உயிர்விடுகிறார்

முட்டாள்தனமான மரபுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரான பெண்ணியத்தின் குரலாகவே அந்த சலிப்பு என் மனதை தாக்கியது. இது சித்ராங்கியின் கதைதானே? ஏன் இதற்கு சாரங்கதாரன் என தொடர்பின்றி அவன் பெயர்? விருப்பமில்லா திருமணத்தில் மாட்டிக்கொண்ட அவள் தானறிந்தவரை அதற்கு எதிராக புரட்சி செய்து இறுதியில் தன் உயிரையே பலிகொடுத்தாள். சாரங்கதாரன் செய்ததெல்லாம் தவறான மரபுகளின் காவலனாக நின்றதும், தந்தையின் தவறுகளுக்கு எதிராக குரலேதும் கொடுக்காமல் இருந்ததுமே.

பழைய வரலாறுகள் காட்டும் தவறுகளின் படிப்பினையில் இருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய. 










Sunday, May 21, 2017

கை கழுவுவோம்

இரண்டாம் உலகபோரை நேசநாடுகள் வெல்ல பல காரணிகள் இருந்தாலும் அதிகம் வெளியே தெரியாத காரணிகள் ராடார் கண்டுபிடிப்பு மற்றும் பெனிசிலின் கண்டுபிடிப்பு

ராடார் கண்டுபிடிக்குமுன் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் இங்கிலாந்துக்கு வரும் உணவு கப்பல்களை தாக்கி அழித்து கடும் நெருக்கடியை உருவாக்கின. உணவின்றி லண்டன் தவித்த நேரம் ராடார் கண்டுபிடிக்கபட்டு அதன்பின் ஜெர்மானிய நீர்மூழ்கிகப்பல்கள் ஒவ்வொன்றாக sitting duck போல் வேட்டையாடபட்டதால் லண்டன் தப்பியது

இன்னொரு கண்டுபிடிப்பு பென்சிலின்

அப்போது போர் சமயம் வைரஸ், பாக்டிரியா தொற்றால் ஏராளமான வீரர்கள் இறந்துகொண்டிருந்தார்கள். இப்போது கான்சர் எப்படி உயிர்கொல்லியோ அப்போது தொற்றுநோய்கள் அப்படி உயிர்கொல்லியாக இருந்தன.

பெனிசிலின் யதேச்சையாக கண்டுபிடிக்கபட்டு பெருமளவில் உற்பத்தி செய்யபட்டு ஏராளமான அமெரிக்க, நேசநாட்டு வீரர்கள் உயிர் தப்பினார்கள். முதலாம் உலகபோரில் 18% வீரர்கள் மரணம் தொற்றுநொயால் என்கையில் இரண்டாம் உலகபோரில் 1% மரணம் மட்டுமே தொற்றுநோயால் நிகழ்ந்தது

பெனிசிலினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாமென முயல்கையில் மருந்து கம்பனியான பைசர் எனும் பன்னாட்டு கம்பனி உரிமையாள்ர் "அதில் எந்த லாபமும் வராது, பயனும் இல்லை" என சொல்லி அதை தயாரிக்க மறுத்தார்.

விதிவசமாக அவரது 16 வயது மகளுக்கு தொற்றூநொய் ஏற்பட்டு பெனிசிலின் கொடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் எனும் சூழலில், மருந்தின்றி உயிரை விட்டார்

அதன்பின்னர் பைசர் கம்பனி பெனிசிலின் மருந்தை தயாரித்து பொதுமக்களுக்கு வெளியிட்டது.

இதை எல்லாம் மிஞ்சும் சோகம்:

1846ல் மருத்துவமனையில் அனுமதீக்கபடும் பெரும்பாலான கர்ப்பிணிகள் தொற்றுநோயால் உயிரை விட், அதை ஆராய்ந்த இக்னாஸ் செம்மல்வாலிஸ் என்பவர் பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் க்ளோரின் நீரால் கையை கழுவினால் மரணவிகிதம் குறையுமென கண்டுபிடித்தார்

கிருமிகள் பற்றிய அறிவு அன்று இல்லை. ஆனால் சவப்பரிசோதனை செய்துவிட்டு கையை கழுவாது அதே கையால் பிரசவம் பார்த்ததால் தான் இப்படி மரணங்கள் நிகழ்ந்தன. சவங்களில் இருந்து வரும்  வாச்ம் போக க்ளோரின் நீரால் கையை கழுவினால் போதும் என இக்னாஸ் நினைத்தார். ஆனால் அதில் கிருமிகள் கொல்லபட்டு வியப்பூட்டும் வகையில் மரண விகிதங்கள் குறைந்த்ன

அப்புறம் என்ன?இத்தனை பெரிய கண்டுபிடிப்புக்கு விருதுகளும், பாராட்டும், பரிசும் கிடைத்தது என எதிர்பார்க்கிறீர்களா?

அது தான் இல்லை. மருத்துவர்களால் தான் கர்ப்பிணிகள் உயிர் இழக்கிறார்கள் என்னும் கண்டுபிடிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு மருத்துவர் லைசென்சே பறிபோனது

அதன்பின்பு விடாமல் தொடர்ந்து தன் கண்டுபிடிப்பை அவர் எல்லாரிடமும் சொல்லிவர, அதன்பின் கடுப்பாகி அவரை பிடித்து பைத்தியகார ஆஸ்பத்திரியில் அடைத்தார்கள்

அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவருடம் "க்ளோரின் போட்டு கையை கழுவி என்னை தொடுங்கள்" என பரிதாபமாக கெஞ்சியிம் கேட்காமல், சிகிச்சை அளித்து அதே தொற்றுநோயில் உயிரிழந்தார் இக்னாஸ்.

அதன்பிப் பல பத்தாண்டுகள் கழித்தே அவரது கண்டுபிடிப்பு உண்மை என ஒப்புகொள்ளபட்டது

இப்போதும் பாத்ரூம் போனபின் நாம் கையை நன்றாக சோப்பு போட்டு கழுவினால் பாதி தொற்றுநோய்கள் ஒழ்ந்துவிடும். குறிப்பாக உணவகங்களில் பணியாற்றுபவர்கள், குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மார்கள், ஆயாக்கள் முதலானோர் பாத்ரூம் போகும் ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு கை கழுவினால் பல லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும்.


Thursday, May 11, 2017

சிறுகதை பயிலரங்கம்

சிறுகதை பயிலரங்கம் குறித்து திருமதி லாவண்யா சுந்தர்ராஜன் அனுப்பிய மடல். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வலைபதிவுகள், முகநூல் தமிழ் குழுக்களில் பங்கேற்கிறார். தமிழ் மற்றும் தமிழ்பள்ளிகளில் மிகுந்த ஆர்வமுடையவர். விரும்பும் நண்பர்கள் உதவ வேண்டுகிறேன்

---------------------------------------

வணக்கம் ,

தமிழ் இலக்கியச் சூழலில் நல்ல சிறுகதைகள் எழுதுவது மிகவும் குறைந்து வரும் சூழலில், நல்ல சிறுகதைகளை படிக்கவும், உணரவும், பின் எழுதவும் ஏதுவான ஒரு தளத்தை உருவாக்க நினைத்து  நாங்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சிறுகதை பயிலரங்கம் ஒன்றை ஒருங்கிணைத்தோம். அதன் புகைப்படங்கள் பதிவுகள் பின்வரும் இணைப்புகளில்.
  


அதை தொடர்ந்து பலர் அதை போன்ற பயிலரங்கத்தில் ஆர்வமாக இருக்கும் காரணத்தால் மீண்டும் ஆகஸ்டில் நடத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த முறை நிகழ்வுக்கு 1,24,000/- செலவு ஆகியது. இம்முறை குறைந்தபட்சம் 80,000/- ஆகுமென்று திட்டமிட்டுள்ளேன். இதில் தங்குமிடம் உணவு பயிற்சியாளர்கள் போக்குவரத்து மற்றும் நடத்தித் தர ஊக்கத்தொகை மற்றும் பங்கேற்பாளர்களுக்கு பரிசாக அளிக்கப்படும் புத்தகம் போன்ற செலவுகள் அடங்கும். கடந்த முறை நிதியளித்த அனைவர்க்கும் காலச்சுவடி அறக்கட்டளை வழி முறையான ரசீதை அனுப்பி வைத்தோம். ஆனா எல்லா செலவுக்களையும் நிதியளித்த அனைவருக்கும் அனுப்பி வைத்தோம். பயிலரங்கத்தின் நன்றியுரையின் போது நிதியளித்தவர் பட்டியலை வாசித்தோம். அதே போல இந்த முறையும் முறையாக ரசீதினை வழக்குவோம். வரவு செலவு கணக்குகளை அனுப்புவோம். 

 நிதி திரட்ட உங்களுக்கு தெரிந்த இலக்கிய ஆர்வமுள்ளவர்களிடம் சொல்லி இந்த நிகழ்வுக்கு நிதி பெற்று தர உதவுகள்.

நிதி அளிக்க வேண்டிய விபரம்

A/C Num: 002101521166
Name: LAVANYA SUNDARARAJAN
Bank: ICICI
Branch: BANGALORE-Whitefield Hope Farm circle
IFSC: ICIC0002181
MICR : 560229066


நன்றி,

லாவண்யா சுந்தர்ராஜன்